Sunday, March 6, 2011

பூமியின் மொத்த மதிப்பு 2 இலட்சத்து 16 ஆயிரம் இலட்சம் கோ

மி+மி உட்பட கோள்களை பண மதிப்பில் கணக்கிடும் முறையை விஞ்ஞானி கிரேக் லாக்லின் கண்டுபிடித்துள்ளார். அவரது கணக்கின்படி, நாம் வாழும் பூமியின் பண மதிப்பு ரூ. 2 இலட்சத்து 16 ஆயிரம் இலட்சம் கோடி இந்திய ரூபாய். கொஞ்சம் தலை சுற்றவே செய்யும். அதாவது 3,000 திரில்லியன் பவுண்ஸ்.

(1 ட்ரில்லியன் = 1 இலட்சம் கோடி) கோள்களின் அளவு, வயது, வெப்பம், உயிரினங்கள், அடர்த்தி மற்றும் வளங்கள் ஆகியவை அடிப்படையில் மதிப்பை கிரேக் கணக்கிடுகிறார். அதன்படி, பிரபஞ்சத்தில் உள்ள கோள்களிலேயே பூமிதான் விலை மதிப்பில் முதலிடம் வகிக்கிறது. செவ்வாய் கிரகத்தின் மதிப்பு ரூ. 7.2 இலட்சம் மட்டுமே. உலேகத்தில் வெள்ளியே பரவாயில்லை போலிருக்கிறது. ஒரு கிராம் ரூ. 55 வரை விற்கிறது. வெள்ளி கிரகம் ஒரு ரூபாயை விட குறைந்த மதிப்புடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

தவிர 1,235 கிரகங்கள் உயிரினங்கள் கால் வைக்க முடியாத நிலையில் எல்லா வகையிலும் எதிர்மறை மதிப்பெண்கள் பெறுவதால், அவற்றுக்கு பண மதிப்பே இல்லை என்கிறார் கிரேக். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் கெப்ளர் விண்கலத்தின் மதிப்பு ரூ. 4,320 கோடி என்ற அடிப்படையில், கிரகங்களின் மதிப்பை கிரேக் கணக்கிட்டுள்ளார்.

கிரகங்களை கண்டுபிடிக்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்ட கெப்ளர் விண்கலத்தின் மதிப்பை வைத்து, பல்வேறு கிரகங்களின் முக்கிய அம்சங்கள் அடிப்படையில் மதிப்பை அவர் நிர்ணயித்தார். இது பற்றி அவர் கூறுகையில், ‘இந்த சமன்பாடுகளின்படி விலை மதிக்க முடியாதது எதுவுமில்லை. ஆனால், பூமியைப் போல அதிக மதிப்புள்ள கிரகங்களும் இல்லை என்பதை உணர முடிகிறது’ என்றார்.

***

குழந்தைகளை பாராட்ட இனிப்பு கொடுக்காதீர்கள்:

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

குழந்தைகளை பாராட்டுவதற்காக பெற்றோர்கள் இனிப்புகள் கொடுப்பது தவறானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் சேட்டை செய்யாமல் இருந்தால், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தால் உடனே பெற்றோர் அவர்களுக்கு இனிப்புகளோ அல்லது நொறுக்கு தீனியோ கொடுத்து பாராட்டுகின்றனர். இன்னும் சிலர் ஒழுங்காக படித்தால், அடம்பிடிக்காமல் இருந்தால் சொக்லேட் வாங்கித் தருவேன் என்பார்கள்.

அவ்வாறு செய்வது மிகத் தவறு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பெற்றோர்கள் இப்படி எதற்கெடுத்தாலும் இனிப்பு, நொறுக்குத் தீனி கொடுத்தால் குழந்தைகளுக்கு பருமந்தனம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களின் இந்த பழக்கத்தால் குழந்தைகள் பெரியவர்களானதும் உணவுப் பழக்கம் கெடும், அவர்கள் தன்னம்பிக்கை குறையும் மற்றும் உணவுக் குறைபாடுகள் ஏற்படும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது